Skip to main content

"என் உயிர் ஈடாகுமானால்"!

ஏ கடலே !

உனக்கு கருணை இல்லையா ?

உன்னை பார்த்து

ஆனந்த பட்ட என் மக்களுக்கு

நீ கொடுத்த பரிசு

இதுதானா?

எத்தனை எத்தனை

பிஞ்சு குழந்தைகளை

நீ இரையாக்கிக் கொண்டாய் !

எத்தனை எத்தனை

முதியவர்களை

உன்னுள் இழுத்துச் சென்றாய் !

பெற்றத் தாயின்

கையில் இருந்த

பிஞ்சு நெஞ்சை

தட்டி சென்றாயே ....

ஏ கடலே!

நீயும் பெண் தானே ?

இந்தியா வல்லரசாகி விடும்

என்று கனவு கண்டு

கொண்டு இருந்தோம் !

அந்த கனவை

நனவாக்க நினைத்த

எங்கள் இளம் சிறார் களை

உன் கோரப் பசிக்கு

உணவாக்கி விட்டாயே !

இன்னும் என் மக்க ளால்

ஒரு குஜராத் பூகம்பத்தை

மறக்க முடிய வில்லை .......

ஒரு கும்பகோணம் தீ விபத்தைச்

ஜீரணிக்க முடிய வில்லை......

ஒரு அதிர்ச்சியை

மறக்க நினைப் பதற்குள்

இன்னொரு பேர் அதிர்ச்சியை

கொடுத்து விட்டாயே !

ஏ சுனாமியே !

ஒரு அநாதை இல்லத்தை

மூட நினைப் பதற்குள்

நூறு அநாதை இல்லத்தை

திறக்க வைத்து விட்டாயே ........

அடுத்தவர்களுக்கு உணவிட்டு

மகிழ்ந்த என் மக்களுக்கு

அடுத்த வேலை

சோற்றுக்கு

கையேந்தும் நிலையை

ஏற்படுத்தி விட்டாயே !

ஏ கடலே !

நீ ஆர்பரித்து வரும்போது

உன் அழகை

இரசிக்கத் தானே

என் மக்கள்

காத்து இருந்தனர் .....

அவர்கள் ஆனந்தத் திற்கு

சாவு மணி அடித்து

அழைத்து சென்று விட்டாயே !

ஏ கடலே !

உன் கோரப் பசிக்கு

வயது வித்தியாசம் தெரியாதா ?

நேற்று பிறந்த

மொட்டுகளை எல்லாம்

உணவாக்கிக் கொண்டாயே ....

ஏ பூகம்பமே !

யாரிடம் கற்றுக் கொண்டாய்

இந்த அராஜெக செயலை ....

எப்படி மறந்துப் போனாய்

இறக்கப் பண்பை ....

ஏ சுனாமியே !

இனி ஒருமுறை வேண்டாம்

இது போன்ற கொடுரம்.

உன் உயிர் பசிக்கு

என் உயிர் ஈடாகுமானால்

என்னையே தருகிறேன்

என் மக்களை விட்டு விடு............................!!!

Comments

Popular posts from this blog

"அக்றிணை வாழ்வே மேலென்று எண்ணி எண்ணி"

அற்புதம் என்று நடக்குமென்று ஆநிரை கூட்டம் கூட ஏங்குதம்மா! இறவாப் புகழ் தேடும் மண்ணுளி பாம்புகள் ஈவதற்கு மனித மனம் உண்டோ? உறவுகளை மறந்து போகும் மானிட சமுதாயம் ஊர் வாழ துணை நிற்குமா? எத்தனை பிறவி எடுத்திடினும் ஏன் இந்த பிறப்பென்றே எண்ண வைத்தான்! ஐந்தாண்டுக் கொருமுறை மாறிடும் ஆட்சி ஒரு முறைக் கூட சமுதாய மாற்றம் இன்றி ஓய்ந்து போனது மனித உணர்வுகள் ஒளயத்தில் மனித வாழ்வை வெறுத்து அக்றிணை வாழ்வே மேலென்று எண்ணி எண்ணி.......

வேண்டுமொரு தாய்

களத்து   மேட்டில்   நெல்   அடித்து குளத்து    மேட்டில்   துணி   துவைத்து கட்டு   சோறு   கட்டி   என்னை கல்வி   கற்க   அனுப்பினாய்   அம்மா .... காடு   மேடு   சுற்றி   வந்து காவல்   நீ   எனைக்   காத்து கழனி   சென்று   விறகு   வெட்டி கால்   வயிறு   காஞ்சி   ஊற்றினாய்   அம்மா ..... கட்டியவன்   காப்பாற்ற   வழியற்று கைவிட்டான்   உன்னை கந்து   வட்டி   கடன்   வாங்கி கலெக்டர்   எனை   ஆக்கினாய்    அம்மா ... காடு   சுற்றி   களைத்தவளை முதுகு   தேய   உழைத்தவளை ஊர்   போற்ற   வாழ   வைக்க பிள்ளை   நான்   எண்ணினேன்   அம்மா ... கடைசி   ஒரு   ஆசை   என்று கல்யாணம்   பண்ணி   வைத்தாய் கட்டிய   தாலி   மஞ்சள்   காயுமுன்னே கட்டியவள்   தள்ளி   வைக்க   சொன்னால்   உன்னை ... மனையறம்   தான்  ...

கருவில் இருக்கும் குழந்தையின் கடிதம்

அம்மா ! என்   பிறப்பின்   நேரம்   நெருங்கி   விட்டது . அதற்கு   முன்   என்   கடிதத்திற்கு   பதில்   அளித்து   விடு ... கருவில்   என்னை   நீ   சுமந்து   கொண்டு   இருக்கும்   போதே அண்ணல்   காந்தியைப்   பற்றிப்   படித்தாய் . மாமா   நேருவைப்   பற்றி   படித்தாய் . அப்துல்கலாமை   பற்றி   படித்தாய் . நேதாஜி ,  விவேகானந்தன் ,  பகத்   சிங் பற்றியெல்லாம்   படித்தாய் . கல்பனா   சாவ்லா ,  சுனிதா   வில்லியம்ஸ் பற்றியும்   படித்தாய் . ராமாயணம் ,  இதிகாசம் ,  பகவத்   கீதை பற்றிக்கூட   படித்தாய் . தவறு   செய்யும்   மனிதனுக்கு   என்ன தண்டனை   கிடைக்கும்   என்பதற்க்கான நீதிக்   கதைகளையும்   படித்தாய் . பாரத   பூமியைப்   பற்றிப்   படித்தாய் . பக்கத்து   நாடுகளைப்   பற்றியும்   படித்தாய் . இந்தியக்   கலாச்சாரம் ,  குடும்பம் ,  பா...