ஏ கடலே !
உனக்கு கருணை இல்லையா ?
உன்னை பார்த்து
ஆனந்த பட்ட என் மக்களுக்கு
நீ கொடுத்த பரிசு
இதுதானா?
எத்தனை எத்தனை
பிஞ்சு குழந்தைகளை
நீ இரையாக்கிக் கொண்டாய் !
எத்தனை எத்தனை
முதியவர்களை
உன்னுள் இழுத்துச் சென்றாய் !
பெற்றத் தாயின்
கையில் இருந்த
பிஞ்சு நெஞ்சை
தட்டி சென்றாயே ....
ஏ கடலே!
நீயும் பெண் தானே ?
இந்தியா வல்லரசாகி விடும்
என்று கனவு கண்டு
கொண்டு இருந்தோம் !
அந்த கனவை
நனவாக்க நினைத்த
எங்கள் இளம் சிறார் களை
உன் கோரப் பசிக்கு
உணவாக்கி விட்டாயே !
இன்னும் என் மக்க ளால்
ஒரு குஜராத் பூகம்பத்தை
மறக்க முடிய வில்லை .......
ஒரு கும்பகோணம் தீ விபத்தைச்
ஜீரணிக்க முடிய வில்லை......
ஒரு அதிர்ச்சியை
மறக்க நினைப் பதற்குள்
இன்னொரு பேர் அதிர்ச்சியை
கொடுத்து விட்டாயே !
ஏ சுனாமியே !
ஒரு அநாதை இல்லத்தை
மூட நினைப் பதற்குள்
நூறு அநாதை இல்லத்தை
திறக்க வைத்து விட்டாயே ........
அடுத்தவர்களுக்கு உணவிட்டு
மகிழ்ந்த என் மக்களுக்கு
அடுத்த வேலை
சோற்றுக்கு
கையேந்தும் நிலையை
ஏற்படுத்தி விட்டாயே !
ஏ கடலே !
நீ ஆர்பரித்து வரும்போது
உன் அழகை
இரசிக்கத் தானே
என் மக்கள்
காத்து இருந்தனர் .....
அவர்கள் ஆனந்தத் திற்கு
சாவு மணி அடித்து
அழைத்து சென்று விட்டாயே !
ஏ கடலே !
உன் கோரப் பசிக்கு
வயது வித்தியாசம் தெரியாதா ?
நேற்று பிறந்த
மொட்டுகளை எல்லாம்
உணவாக்கிக் கொண்டாயே ....
ஏ பூகம்பமே !
யாரிடம் கற்றுக் கொண்டாய்
இந்த அராஜெக செயலை ....
எப்படி மறந்துப் போனாய்
இறக்கப் பண்பை ....
ஏ சுனாமியே !
இனி ஒருமுறை வேண்டாம்
இது போன்ற கொடுரம்.
உன் உயிர் பசிக்கு
என் உயிர் ஈடாகுமானால்
என்னையே தருகிறேன்
என் மக்களை விட்டு விடு............................!!!
Comments
Post a Comment