Skip to main content

"என் உயிர் ஈடாகுமானால்"!

ஏ கடலே !

உனக்கு கருணை இல்லையா ?

உன்னை பார்த்து

ஆனந்த பட்ட என் மக்களுக்கு

நீ கொடுத்த பரிசு

இதுதானா?

எத்தனை எத்தனை

பிஞ்சு குழந்தைகளை

நீ இரையாக்கிக் கொண்டாய் !

எத்தனை எத்தனை

முதியவர்களை

உன்னுள் இழுத்துச் சென்றாய் !

பெற்றத் தாயின்

கையில் இருந்த

பிஞ்சு நெஞ்சை

தட்டி சென்றாயே ....

ஏ கடலே!

நீயும் பெண் தானே ?

இந்தியா வல்லரசாகி விடும்

என்று கனவு கண்டு

கொண்டு இருந்தோம் !

அந்த கனவை

நனவாக்க நினைத்த

எங்கள் இளம் சிறார் களை

உன் கோரப் பசிக்கு

உணவாக்கி விட்டாயே !

இன்னும் என் மக்க ளால்

ஒரு குஜராத் பூகம்பத்தை

மறக்க முடிய வில்லை .......

ஒரு கும்பகோணம் தீ விபத்தைச்

ஜீரணிக்க முடிய வில்லை......

ஒரு அதிர்ச்சியை

மறக்க நினைப் பதற்குள்

இன்னொரு பேர் அதிர்ச்சியை

கொடுத்து விட்டாயே !

ஏ சுனாமியே !

ஒரு அநாதை இல்லத்தை

மூட நினைப் பதற்குள்

நூறு அநாதை இல்லத்தை

திறக்க வைத்து விட்டாயே ........

அடுத்தவர்களுக்கு உணவிட்டு

மகிழ்ந்த என் மக்களுக்கு

அடுத்த வேலை

சோற்றுக்கு

கையேந்தும் நிலையை

ஏற்படுத்தி விட்டாயே !

ஏ கடலே !

நீ ஆர்பரித்து வரும்போது

உன் அழகை

இரசிக்கத் தானே

என் மக்கள்

காத்து இருந்தனர் .....

அவர்கள் ஆனந்தத் திற்கு

சாவு மணி அடித்து

அழைத்து சென்று விட்டாயே !

ஏ கடலே !

உன் கோரப் பசிக்கு

வயது வித்தியாசம் தெரியாதா ?

நேற்று பிறந்த

மொட்டுகளை எல்லாம்

உணவாக்கிக் கொண்டாயே ....

ஏ பூகம்பமே !

யாரிடம் கற்றுக் கொண்டாய்

இந்த அராஜெக செயலை ....

எப்படி மறந்துப் போனாய்

இறக்கப் பண்பை ....

ஏ சுனாமியே !

இனி ஒருமுறை வேண்டாம்

இது போன்ற கொடுரம்.

உன் உயிர் பசிக்கு

என் உயிர் ஈடாகுமானால்

என்னையே தருகிறேன்

என் மக்களை விட்டு விடு............................!!!

Comments

Popular posts from this blog

சின்ன சின்ன ஆசைகள்

எனது சின்ன சின்ன ஆசைகளை இங்கு பதிவு செய்கிறேன். படித்து முடித்து விட்டு அடி பாவி! இதுவா உனக்கு சின்ன சின்ன ஆசைகள் அப்படின்னு கேட்கக் கூடாது. சரியா? ******** யாருமற்ற உலகத்தில் எனக்கென்று ஓர் தேசம் வேண்டும் . அதில் நான் மட்டுமே ராணியாக இருக்க வேண்டும் . பூ , காய் , கனி , செடி , கொடி , மரம் இவையனைத்தும் பேச வாய் முளைத்து என்னுடன் பேச வேண்டும் . மான் , மயில் , குயில் , புறா , நாய் இவையனைத்தும் எனக்கு தோழிகள் ஆக வேண்டும் . மீண்டும் மழலையாக மாறும் வரம் வேண்டும் . பொய்யொன்று பேசாத உலகம் வேண்டும் . உதவி என்றால் உயிரையும் கொடுக்கும் உறவுகள் வேண்டும் . நிலவினை கையில் பிடித்து அதனுடன் கவிதைகள் பேசும் தருணங்கள் வேண்டும் . நட்புக்கு இலக்கணம் நான் என்று என் பெயரும் பொன்னேட்டில் ஏற வேண்டும் . சொர்க்கமோ நரகமோ எங்கிருந்தாலும் அம்மா நான் நலமாக இருக்கிறேன் என்று தகவல்கள் அனுப்ப கருவிகள் வேண்டும் . பென்சில் கோடுகளைப் போல என் துன்பத்தையும் துடைத்து எடுக்க ஒரு ரப்பர் ( அழிப்பான் ) வேண்டும் . எனக்கு சந்தோஷம் கூட மலிவு விலையில் கடைகளில் கிடைக

"இருந்தால் என்ன? ஒழிந்தால் என்ன?"

ஏ சுனாமியே! நீ செத்தொழிய மாட்டாயோ ? ஏ மரணமே! உனக்கு மரணம் வாராதோ? ஏ சுனாமியே! பச்சிளம் குழந்தை என்று பாராமல் பலி கொண்டாயே அந்த மொட்டுகளிடம் மன்னிப்பு கேள் ... ஏ மரணமே! சதியாலோசனை செய்து சுனாமிக்குத் துணை போனையே என் உயிர் மக்களிடம் மண்டியிடு... ஏ இயற்கையே ! உலகத்தில் பூத்து உனக்கு அழகு சேர்த்த மனித இனங்களை உன் கொபக்கனளுக்கு இறையாக்குகிறாயே... ஏ இயற்கையே உன்னையும் அழித்துக் கொண்டு மனிதப் பூக்களையும் அழிக்கும் நீ இருந்தால் என்ன? ஒழிந்தால் என்ன?!!!

"அக்றிணை வாழ்வே மேலென்று எண்ணி எண்ணி"

அற்புதம் என்று நடக்குமென்று ஆநிரை கூட்டம் கூட ஏங்குதம்மா! இறவாப் புகழ் தேடும் மண்ணுளி பாம்புகள் ஈவதற்கு மனித மனம் உண்டோ? உறவுகளை மறந்து போகும் மானிட சமுதாயம் ஊர் வாழ துணை நிற்குமா? எத்தனை பிறவி எடுத்திடினும் ஏன் இந்த பிறப்பென்றே எண்ண வைத்தான்! ஐந்தாண்டுக் கொருமுறை மாறிடும் ஆட்சி ஒரு முறைக் கூட சமுதாய மாற்றம் இன்றி ஓய்ந்து போனது மனித உணர்வுகள் ஒளயத்தில் மனித வாழ்வை வெறுத்து அக்றிணை வாழ்வே மேலென்று எண்ணி எண்ணி.......