Skip to main content

Posts

Showing posts from October, 2010

" இனிமை "

என் ஐபாடில் இல்லையே உன் குரல் போல் இனிமையாய்.........!!! written by Raj my close friend

"என் தேசத்தை காணவில்லை"

ஏ உலக மக்களே !!! இங்கு என் தேசத்தை காணவில்லை யாரேனும் கண்டீர்களா? இந்தியா என்றொரு புண்ணிய பூமி இருந்தது யாரேனும் கண்டீர்களா? என் தேசத்தில் ஒருவனுக்கு ஒருத்தி எனும் உயர்ந்த ஒழுக்கத்தோடு வாழ்ந்து வருகிறார்கள் யாரேனும் கண்டீர்களா? கூட்டுக் குடும்பமாய் குருவி கூடுகளைப் போல வாழ்ந்து வரும் என் தேச மக்களை எங்கேனும் கண்டீர்களா? என் தேசத்தில் ஒரு மாநில மக்களுக்கு துன்பம் என்றால் இன்னொரு மாநிலத்தவர் உயிரையும் கொடுப்பார்களே கண்டீர்களா என் தேச மக்களை? பல நாட்டு மக்களும் என் நாட்டு கலாச்சாரத்தை பார்த்து வியந்து கொண்டு இருப்பார்களே கண்டீர்களா அவர்களை? என் கொள்ளு பாட்டன் காந்தியும் என் மாமா நேருவும் வாழ்ந்த என் புண்ணிய தேசத்தை கண்டீர்களா? என் பாட்டன் மார்கள் ரத்தம் சிந்தி சுதந்திரம் வாங்கிய என் புண்ணிய பூமியை கண்டீர்களா? என் தாய் மார்கள் என் தாய் மக்களுக்கு வீரப் பால் ஊட்டி வளர்த்தார்களே அப்படிப் பட்ட என் வீர பூமியை கண்டீர்களா? சகோதர பாசத்தில் சாணக்கியனை தோற்கடிக்கும் என் தேச சிங்கங்களை பார்த்தீர்களா? ஏ மூடனே!!! அதோ உன் தேசம்!! காமத்திற்காக பெற்ற மகளின் கற்பை சூறையாடும் காமுகர்கள் நிறைந்த உன் புண்ணி