அனாதைகளாய் திரிகின்றோம் ஆதரவு கரம் நீட்டுவோர் இல்லை இலங்கை என்ன யுத்த பூமியா ? இல்லை ரத்த பூமியா ? ஈன்ற அன்னை மாண்டு போனது தெரியாமல் உயிர் பால் தேடுகின்றன பச்சிளம் பிஞ்சுகள் ஊருக்கு உபதேசம் செய்யும் எந்தன் தாய் திருநாடு – தமிழ் ஏழைகளின் உயிர் காக்க மறந்தது ஏனோ ? ஐயம் ! ஐயம் ! ஐயம் ! என்றே விடிகிறது ஒவ்வொரு விடியலும் . ஓலம் ! எங்கு நோக்கினும் மரண ஓலங்கள் - இலங்கை ஒளயத்தில் மனித உயிர்கள் விலையின்றி விற்கப்படுகின்றன . அக்தோ பரிதாபம் .............