ஏ இளைஜனே ! பைத்தியக்காரனிடம் கூட தத்ரூபமாக சிலை வடிக்கும் அழகைக் கண்டேன். கால் ஊனமுற்றவனிடம் கூட ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்லும் அளவுக்கு தன்னம்பிக்கையைக் கண்டேன். கண் இல்லாதவனிடம் கூட இயற்கையை அழகாக வர்ணித்து கவி எழுதும் ஆற்றலைக் கண்டேன். கை, கால் அற்றவனிடம் கூட தூரிகையை வாயினில் ஏந்தி ஓவியம் தீட்டும் அழகைக் கண்டேன். ஏ இளைஜனே ! உன்னிடம் மட்டும் தான் வன்முறைக்கும், தீவிரவாதத்திற்கும் துணை போகும் ஈனச் செயலைக் காண்கிறேன்...!