Skip to main content

Posts

Showing posts from 2010

"அக்றிணை வாழ்வே மேலென்று எண்ணி எண்ணி"

அற்புதம் என்று நடக்குமென்று ஆநிரை கூட்டம் கூட ஏங்குதம்மா! இறவாப் புகழ் தேடும் மண்ணுளி பாம்புகள் ஈவதற்கு மனித மனம் உண்டோ? உறவுகளை மறந்து போகும் மானிட சமுதாயம் ஊர் வாழ துணை நிற்குமா? எத்தனை பிறவி எடுத்திடினும் ஏன் இந்த பிறப்பென்றே எண்ண வைத்தான்! ஐந்தாண்டுக் கொருமுறை மாறிடும் ஆட்சி ஒரு முறைக் கூட சமுதாய மாற்றம் இன்றி ஓய்ந்து போனது மனித உணர்வுகள் ஒளயத்தில் மனித வாழ்வை வெறுத்து அக்றிணை வாழ்வே மேலென்று எண்ணி எண்ணி.......

" இனிமை "

என் ஐபாடில் இல்லையே உன் குரல் போல் இனிமையாய்.........!!! written by Raj my close friend

"என் தேசத்தை காணவில்லை"

ஏ உலக மக்களே !!! இங்கு என் தேசத்தை காணவில்லை யாரேனும் கண்டீர்களா? இந்தியா என்றொரு புண்ணிய பூமி இருந்தது யாரேனும் கண்டீர்களா? என் தேசத்தில் ஒருவனுக்கு ஒருத்தி எனும் உயர்ந்த ஒழுக்கத்தோடு வாழ்ந்து வருகிறார்கள் யாரேனும் கண்டீர்களா? கூட்டுக் குடும்பமாய் குருவி கூடுகளைப் போல வாழ்ந்து வரும் என் தேச மக்களை எங்கேனும் கண்டீர்களா? என் தேசத்தில் ஒரு மாநில மக்களுக்கு துன்பம் என்றால் இன்னொரு மாநிலத்தவர் உயிரையும் கொடுப்பார்களே கண்டீர்களா என் தேச மக்களை? பல நாட்டு மக்களும் என் நாட்டு கலாச்சாரத்தை பார்த்து வியந்து கொண்டு இருப்பார்களே கண்டீர்களா அவர்களை? என் கொள்ளு பாட்டன் காந்தியும் என் மாமா நேருவும் வாழ்ந்த என் புண்ணிய தேசத்தை கண்டீர்களா? என் பாட்டன் மார்கள் ரத்தம் சிந்தி சுதந்திரம் வாங்கிய என் புண்ணிய பூமியை கண்டீர்களா? என் தாய் மார்கள் என் தாய் மக்களுக்கு வீரப் பால் ஊட்டி வளர்த்தார்களே அப்படிப் பட்ட என் வீர பூமியை கண்டீர்களா? சகோதர பாசத்தில் சாணக்கியனை தோற்கடிக்கும் என் தேச சிங்கங்களை பார்த்தீர்களா? ஏ மூடனே!!! அதோ உன் தேசம்!! காமத்திற்காக பெற்ற மகளின் கற்பை சூறையாடும் காமுகர்கள் நிறைந்த உன் புண்ணி

"தவற விட்ட பொக்கிஷங்கள்"

* இரவு பத்து மணிக்கு பிறகு கடற்கரையில் அமர்ந்து பவுர்ணமியை ரசித்து பார்க்கும் தருணம் . * நண்பனுக்கு பண உதவி , பொருள் உதவி என்றால் அம்மாவின் அனுமதிக்காக காத்திருக்காத நேரம் . * நண்பனை மச்சி , மாமா என்று வாஞ்சையோடும் உரிமையோடும் பேசும் வார்த்தைகள் . * பள்ளி நாட்களில் நட்ட நடு ராத்திரியில் ரோட்டோர டீ கடையில் நண்பனோடு டீ குடிக்கும் திருட்டு இரவுகள் . * சாலையோர பானிபூரி கடையில் பசங்களோடு பசங்களாக நின்று பானிபூரி சாப்பிடும் வாய்ப்பு . * நண்பன் வீட்டு கல்யாணத்தில் குடும்பத்தில் ஒருவராக முன் நின்று நடத்தும் பொன்னான நாட்கள் . * ஆண் நண்பர்களோடு அடிக்கடி பைக்கில் உல்லாச பயணம் செல்லும் இன்ப சுற்றுலா . * இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் நண்பர்களோடு சினிமா பார்க்கும் உன்னத நாட்கள் . * நியூ இயர் , பண்டிகை நாட்களில் நண்பர்களோடு மணிகணக்கில் கடற்கரையில் அரட்டை . * நண்பன் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்கும் போது ' மச்சி அடி வாங்க போற '

"பெண்ணடிமை"

என்றோ விடிந்தது எமக்கான விடியல்!!! ஆனால் இன்றும் விடியலை நோக்கியே பயணம்............................!!!

சின்ன சின்ன ஆசைகள் (2)

ஆழ் கடலின் மேல் நடந்து செல்ல இரண்டடி பாதை வேண்டும். துன்பத்தில் தோல் சாய்ந்து கொள்ள கணவன் என்ற பெயரில் நண்பன் வேண்டும். கண்ணீரைத் துடைக்கும் கைக்குட்டையாக நட்பின் கரங்கள் வேண்டும். கடந்த கால வாழ்க்கையை மீண்டும் ஒரு முறை திருத்தி வாழ டேப் ரெகார்டரை போலவே எனக்கும் ஒரு ரீவைன் பட்டன் வேண்டும். துணிகளை போலவே மனித மனங்களையும் சலவை செய்ய ஒரு டிடர்ஜென்ட் கேக் வேண்டும். அன்பு என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடும் பட்டியலில் என் பெயரும் இருக்க வேண்டும். அடுத்து வரும் பிறவியிலாவது கம்பனுக்கு மகளாக பிறக்கும் வரம் வேண்டும். ரவி வர்மாவின் ஓவியம் கூட உயிர் பெற்று என்னுடன் நட்புறவாட வேண்டும். கடவுள்கள் அனைவரும் வருடத்திற்கு ஒரு முறை மனிதனாக மாறும் சாபம் பெற்று மக்களின் துயர் அறிய வேண்டும். காதல் என்ற பெயரில் காமத்தை பரப்பும் இளைஜர்கள் மாறும் நிலை வர வேண்டும். இந்த உலகத்தை புரிந்து கொள்ள இன்னும் ஓர் இதயம் வேண்டும். காதலைப் பற்றி தெரிந்து கொள்ள ஓர் மிகப்பெரிய காதல் தோல்வி வேண்டும். ரமணிச்சந்திரனின் நாயகன் உருபெற்று, உயிர்பெற்று கணவனாக வரும் அற்புத வரம் வேண்டும். எந்தன் நிழல் கூட உறுப் பெற்று எனக்கு தோழியாக

சின்ன சின்ன ஆசைகள்

எனது சின்ன சின்ன ஆசைகளை இங்கு பதிவு செய்கிறேன். படித்து முடித்து விட்டு அடி பாவி! இதுவா உனக்கு சின்ன சின்ன ஆசைகள் அப்படின்னு கேட்கக் கூடாது. சரியா? ******** யாருமற்ற உலகத்தில் எனக்கென்று ஓர் தேசம் வேண்டும் . அதில் நான் மட்டுமே ராணியாக இருக்க வேண்டும் . பூ , காய் , கனி , செடி , கொடி , மரம் இவையனைத்தும் பேச வாய் முளைத்து என்னுடன் பேச வேண்டும் . மான் , மயில் , குயில் , புறா , நாய் இவையனைத்தும் எனக்கு தோழிகள் ஆக வேண்டும் . மீண்டும் மழலையாக மாறும் வரம் வேண்டும் . பொய்யொன்று பேசாத உலகம் வேண்டும் . உதவி என்றால் உயிரையும் கொடுக்கும் உறவுகள் வேண்டும் . நிலவினை கையில் பிடித்து அதனுடன் கவிதைகள் பேசும் தருணங்கள் வேண்டும் . நட்புக்கு இலக்கணம் நான் என்று என் பெயரும் பொன்னேட்டில் ஏற வேண்டும் . சொர்க்கமோ நரகமோ எங்கிருந்தாலும் அம்மா நான் நலமாக இருக்கிறேன் என்று தகவல்கள் அனுப்ப கருவிகள் வேண்டும் . பென்சில் கோடுகளைப் போல என் துன்பத்தையும் துடைத்து எடுக்க ஒரு ரப்பர் ( அழிப்பான் ) வேண்டும் . எனக்கு சந்தோஷம் கூட மலிவு விலையில் கடைகளில் கிடைக