Skip to main content

Posts

Showing posts from May, 2010

சின்ன சின்ன ஆசைகள் (2)

ஆழ் கடலின் மேல் நடந்து செல்ல இரண்டடி பாதை வேண்டும். துன்பத்தில் தோல் சாய்ந்து கொள்ள கணவன் என்ற பெயரில் நண்பன் வேண்டும். கண்ணீரைத் துடைக்கும் கைக்குட்டையாக நட்பின் கரங்கள் வேண்டும். கடந்த கால வாழ்க்கையை மீண்டும் ஒரு முறை திருத்தி வாழ டேப் ரெகார்டரை போலவே எனக்கும் ஒரு ரீவைன் பட்டன் வேண்டும். துணிகளை போலவே மனித மனங்களையும் சலவை செய்ய ஒரு டிடர்ஜென்ட் கேக் வேண்டும். அன்பு என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடும் பட்டியலில் என் பெயரும் இருக்க வேண்டும். அடுத்து வரும் பிறவியிலாவது கம்பனுக்கு மகளாக பிறக்கும் வரம் வேண்டும். ரவி வர்மாவின் ஓவியம் கூட உயிர் பெற்று என்னுடன் நட்புறவாட வேண்டும். கடவுள்கள் அனைவரும் வருடத்திற்கு ஒரு முறை மனிதனாக மாறும் சாபம் பெற்று மக்களின் துயர் அறிய வேண்டும். காதல் என்ற பெயரில் காமத்தை பரப்பும் இளைஜர்கள் மாறும் நிலை வர வேண்டும். இந்த உலகத்தை புரிந்து கொள்ள இன்னும் ஓர் இதயம் வேண்டும். காதலைப் பற்றி தெரிந்து கொள்ள ஓர் மிகப்பெரிய காதல் தோல்வி வேண்டும். ரமணிச்சந்திரனின் நாயகன் உருபெற்று, உயிர்பெற்று கணவனாக வரும் அற்புத வரம் வேண்டும். எந்தன் நிழல் கூட உறுப் பெற்று எனக்கு தோழியாக