களத்து மேட்டில் நெல் அடித்து
குளத்து மேட்டில் துணி துவைத்து
கட்டு சோறு கட்டி என்னை
கல்வி கற்க அனுப்பினாய் அம்மா....
காடு மேடு சுற்றி வந்து
காவல் நீ எனைக் காத்து
கழனி சென்று விறகு வெட்டி
கால் வயிறு காஞ்சி ஊற்றினாய் அம்மா.....
கட்டியவன் காப்பாற்ற வழியற்று
கைவிட்டான் உன்னை
கந்து வட்டி கடன் வாங்கி
கலெக்டர் எனை ஆக்கினாய் அம்மா...
காடு சுற்றி களைத்தவளை
முதுகு தேய உழைத்தவளை
ஊர் போற்ற வாழ வைக்க
பிள்ளை நான் எண்ணினேன் அம்மா...
கடைசி ஒரு ஆசை என்று
கல்யாணம் பண்ணி வைத்தாய்
கட்டிய தாலி மஞ்சள் காயுமுன்னே
கட்டியவள் தள்ளி வைக்க சொன்னால் உன்னை...
மனையறம் தான் முக்கியமென்று
மனைவி வழி போகச் சொன்னாய்
கலெக்டரே ஆனாலும்
கணவன் என்ற முறையில் வாழச் சொன்னாய்....
பெற்றவளை பிள்ளை பாசத்திற்கு
ஏங்க வைத்து பிள்ளை நான்
பிரிந்து சென்றேன்
கட்டியவள் வழி நடத்த....
கஞ்சி ஊற்ற நாதியற்று
கல்லறையில் உறங்கிப் போனாய்
கதியற்று போனேன் அம்மா
மதியற்று போனேன்.....
உனை இருக்கும் போது விட்டு விட்டு
கல்லறை போன பின்னே
காலம் கடந்து
புலம்புகிறேன் அம்மா.....
வேண்டுமொரு தாயென்று
காசு கொடுத்து கேட்டாலும்
கண்ணீர் சிந்தி புலம்பினாலும்
கிடைப்பவளா நீ அம்மா?.....
பத்து தாய்களை தத்து எடுத்து
பரிகாரம் தேடினாலும்
பெற்றவளை தவிக்க விட்ட
பாவம் தான் போகுமா அம்மா ?........
நித்தம் ஒரு முத்தம் கொடுத்து
நித்திரை மறந்தவளை
சத்தமின்றி சாகடித்தேன்
சாத்தான் வழி வந்தவன் நான்......
கட்டிளம் காளைகளை
கண்ணீருடன் வேண்டுகிறேன்
முலைப்பால் ஊட்டியவளுக்கு
கடைசிப் பால் ஊற்றும் வரை....
கல்யாண போதையிலே
காசு பார்க்கும் மமதையிலே
தவிக்க நீ விட்டாய் என்றால்
தண்டிக்கப் படுவாய் அப்பா
தண்டிக்கப் படுவாய்......
தண்டனை கொடுக்கப் போவது
பெற்றவளும் அல்ல
பெற்றவளை தவிக்க விட்ட நானுமல்ல
உன் வழி பார்த்து வளரும்
உன் பிள்ளையால்
தண்டிக்கப் படுவாய் அப்பா
தண்டிக்கப் படுவாய்......
குளத்து மேட்டில் துணி துவைத்து
கட்டு சோறு கட்டி என்னை
காவல் நீ எனைக் காத்து
கட்டியவள் வழி நடத்த....
சாத்தான் வழி வந்தவன் நான்......
தண்டிக்கப் படுவாய்......
பெற்றவளை தவிக்க விட்ட நானுமல்ல
தண்டிக்கப் படுவாய்......
GUIDE ME TO PUBLISH MY KAVITHAI AND IMPROVE MY WRITING SKILLS
ReplyDelete