Skip to main content

"கௌரவப்பட்டம்"














என் மகளே!
நான் பிறந்தபோது
என் தாய் பெற்ற
பேரானந்தத்தை
என்னையும்
பெற வைத்தாய்.....
கோடானு கோடி
கொட்டிகொடுத்தும்
பல பேருக்கு கிடைக்காத
"அம்மா"
என்ற ஸ்தானத்தை
இந்த அபலையின்
வயிற்றில் அவதரித்து
நீ எனக்கு அளித்தாய்....
ஊரார் பேசும்
"மலடி" என்ற
சொல் அம்புகளிலிருந்து
என்னைக் காத்தருளினாய்....
என் காதல் திருமணத்தில்
பிரிந்த
உன் தாத்தா, பாட்டி,
அத்தை, மாமா, சித்தி
உறவுகளை மீண்டும்
உன் பிறப்பின் மூலம்
மீட்டுக் கொடுத்தாய்...
என் கண்ணே!
நீ பிறந்த போதுதானடி
எப்போதும்
முகம் சுளிக்கும்
அப்பா வீட்டுப் பாட்டியின்
முகத்தில் புன்னகையைக்
காண்கிறேன்...
நீ தத்தித் தத்தி
நடந்து வந்து தாத்தாவை
பொக்கை வாய்
தெரிய சிரிக்க வைத்து
என் மீது கொண்ட
கோபத்தை
தனிய வைத்தாய்.....
என் செல்லமே!
நீ அம்மா என்று
அழைக்கும்
மழலைச் சொல்லை
வேறு மொழியோடு ஒப்பிட
வழி தெரியாமல் தவிக்கிறேன்...
அம்மா என்ற
கௌரவப் பட்டம்
அளித்து
இப்பிறவியை எனக்கு
புனிதப்படுத்திக் கொடுத்தாய்......
உன் பட்டு மேனியை
தொட்டுப் பார்த்து
உள்ளம் சிலிர்த்துப் போனேன்.
அந்த உணர்வுகளை எழுத
மொழித் தெரியாமல்
தவிக்கிறேன்...
உன் மழலை சிரிப்பை
நீ மட்டுமே அறிந்த
உன் மழலை மொழியை
எந்த இசையோடும்
ஒப்பிட முடியாமல்
தோற்றுப் போகிறேன்...
நீ எனக்கு முத்தம்
கொடுக்கும்
தாள சத்தத்தையும்
எச்சிலின் சுவையையும்
வர்ணிக்க
வார்த்தைகளன்றி தவிக்கிறேன்..
என் தங்கமே!
அம்மா என்ற
"கௌரவப்பட்டம்"
கொடுத்த உன்னை
டாக்டராகவோ,
பொறியியல் வல்லுனராகவோ,
கலக்டராகவோ
உருவாக்க
விரும்ப வில்லை....
மனித வடிவில் நடமாடும்
விலங்குக் கூட்டத்திற்கு
மத்தியில்
சிறந்த மனிதனாக
வளர்க்க ஆசைப்படுகிறேன்.........

Comments

  1. தாய்மை உணர்வைதான் எழுதிட வார்த்தைகள் ஏது.....மிகவும் நன்றாக இருக்கிறது !!!
    வாழ்த்துகள் கவிதா !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சின்ன சின்ன ஆசைகள்

எனது சின்ன சின்ன ஆசைகளை இங்கு பதிவு செய்கிறேன். படித்து முடித்து விட்டு அடி பாவி! இதுவா உனக்கு சின்ன சின்ன ஆசைகள் அப்படின்னு கேட்கக் கூடாது. சரியா? ******** யாருமற்ற உலகத்தில் எனக்கென்று ஓர் தேசம் வேண்டும் . அதில் நான் மட்டுமே ராணியாக இருக்க வேண்டும் . பூ , காய் , கனி , செடி , கொடி , மரம் இவையனைத்தும் பேச வாய் முளைத்து என்னுடன் பேச வேண்டும் . மான் , மயில் , குயில் , புறா , நாய் இவையனைத்தும் எனக்கு தோழிகள் ஆக வேண்டும் . மீண்டும் மழலையாக மாறும் வரம் வேண்டும் . பொய்யொன்று பேசாத உலகம் வேண்டும் . உதவி என்றால் உயிரையும் கொடுக்கும் உறவுகள் வேண்டும் . நிலவினை கையில் பிடித்து அதனுடன் கவிதைகள் பேசும் தருணங்கள் வேண்டும் . நட்புக்கு இலக்கணம் நான் என்று என் பெயரும் பொன்னேட்டில் ஏற வேண்டும் . சொர்க்கமோ நரகமோ எங்கிருந்தாலும் அம்மா நான் நலமாக இருக்கிறேன் என்று தகவல்கள் அனுப்ப கருவிகள் வேண்டும் . பென்சில் கோடுகளைப் போல என் துன்பத்தையும் துடைத்து எடுக்க ஒரு ரப்பர் ( அழிப்பான் ) வேண்டும் . எனக்கு சந்தோஷம் கூட மலிவு விலையில் கடைகளில் கிடைக

"இருந்தால் என்ன? ஒழிந்தால் என்ன?"

ஏ சுனாமியே! நீ செத்தொழிய மாட்டாயோ ? ஏ மரணமே! உனக்கு மரணம் வாராதோ? ஏ சுனாமியே! பச்சிளம் குழந்தை என்று பாராமல் பலி கொண்டாயே அந்த மொட்டுகளிடம் மன்னிப்பு கேள் ... ஏ மரணமே! சதியாலோசனை செய்து சுனாமிக்குத் துணை போனையே என் உயிர் மக்களிடம் மண்டியிடு... ஏ இயற்கையே ! உலகத்தில் பூத்து உனக்கு அழகு சேர்த்த மனித இனங்களை உன் கொபக்கனளுக்கு இறையாக்குகிறாயே... ஏ இயற்கையே உன்னையும் அழித்துக் கொண்டு மனிதப் பூக்களையும் அழிக்கும் நீ இருந்தால் என்ன? ஒழிந்தால் என்ன?!!!

"அக்றிணை வாழ்வே மேலென்று எண்ணி எண்ணி"

அற்புதம் என்று நடக்குமென்று ஆநிரை கூட்டம் கூட ஏங்குதம்மா! இறவாப் புகழ் தேடும் மண்ணுளி பாம்புகள் ஈவதற்கு மனித மனம் உண்டோ? உறவுகளை மறந்து போகும் மானிட சமுதாயம் ஊர் வாழ துணை நிற்குமா? எத்தனை பிறவி எடுத்திடினும் ஏன் இந்த பிறப்பென்றே எண்ண வைத்தான்! ஐந்தாண்டுக் கொருமுறை மாறிடும் ஆட்சி ஒரு முறைக் கூட சமுதாய மாற்றம் இன்றி ஓய்ந்து போனது மனித உணர்வுகள் ஒளயத்தில் மனித வாழ்வை வெறுத்து அக்றிணை வாழ்வே மேலென்று எண்ணி எண்ணி.......