Skip to main content

"உருகிட நினைத்தேன்"


பெண்ணே!
உன் பார்வை வீச்சில்
என் வாழ்நாளை
அற்பனிக்கத்தான்
நினைத்தேன்.
நீ கொஞ்சி பேசும்
பிஞ்சு மொழியில்
என்னை மறந்து
உருகிடத்தான்
நினைத்தேன்...
உன் மல்லிகைப் பூ
புன்னகையில்
மனதை பறிகொடுக்கத்தான்
நினைத்தேன்..
உன் கால் கொலுசின்
ஓசையில் வரும்
சங்கீதத்தில்
நான் கவிதைகள் பாடத்தான்
நினைத்தேன்..
உன் கண்கள்
பேசும் மொழியை
என் இதய சிறைக்குள்
பாதுகாக்கத் தான்
நினைத்தேன்.
உன்னை அடைந்து
என்றும் என் வாழ்க்கையை
பௌர்ணமியாக
மாற்றிக்கொள்ளத்தான்
நினைத்தேன்..
ஆனால்
ஏற்கனவே ஒரு காதல்
"தோல்வியைக்
கற்றுத் தராமல்"
இருந்திருந்தால்.....
l

Comments

Popular posts from this blog

"அக்றிணை வாழ்வே மேலென்று எண்ணி எண்ணி"

அற்புதம் என்று நடக்குமென்று ஆநிரை கூட்டம் கூட ஏங்குதம்மா! இறவாப் புகழ் தேடும் மண்ணுளி பாம்புகள் ஈவதற்கு மனித மனம் உண்டோ? உறவுகளை மறந்து போகும் மானிட சமுதாயம் ஊர் வாழ துணை நிற்குமா? எத்தனை பிறவி எடுத்திடினும் ஏன் இந்த பிறப்பென்றே எண்ண வைத்தான்! ஐந்தாண்டுக் கொருமுறை மாறிடும் ஆட்சி ஒரு முறைக் கூட சமுதாய மாற்றம் இன்றி ஓய்ந்து போனது மனித உணர்வுகள் ஒளயத்தில் மனித வாழ்வை வெறுத்து அக்றிணை வாழ்வே மேலென்று எண்ணி எண்ணி.......

தேடிச் சோறு நிதம் தின்று/பாரதியார் கவிதை/தமிழும் நானும்/தமிழ் கவிதை/பாரதி

வேண்டுமொரு தாய்

களத்து   மேட்டில்   நெல்   அடித்து குளத்து    மேட்டில்   துணி   துவைத்து கட்டு   சோறு   கட்டி   என்னை கல்வி   கற்க   அனுப்பினாய்   அம்மா .... காடு   மேடு   சுற்றி   வந்து காவல்   நீ   எனைக்   காத்து கழனி   சென்று   விறகு   வெட்டி கால்   வயிறு   காஞ்சி   ஊற்றினாய்   அம்மா ..... கட்டியவன்   காப்பாற்ற   வழியற்று கைவிட்டான்   உன்னை கந்து   வட்டி   கடன்   வாங்கி கலெக்டர்   எனை   ஆக்கினாய்    அம்மா ... காடு   சுற்றி   களைத்தவளை முதுகு   தேய   உழைத்தவளை ஊர்   போற்ற   வாழ   வைக்க பிள்ளை   நான்   எண்ணினேன்   அம்மா ... கடைசி   ஒரு   ஆசை   என்று கல்யாணம்   பண்ணி   வைத்தாய் கட்டிய   தாலி   மஞ்சள்   காயுமுன்னே கட்டியவள்   தள்ளி   வைக்க   சொன்னால்   உன்னை ... மனையறம்   தான்  ...