Skip to main content

கருவில் இருக்கும் குழந்தையின் கடிதம்


அம்மா!
என் பிறப்பின் நேரம் நெருங்கி விட்டது.
அதற்கு முன் என் கடிதத்திற்கு பதில் அளித்து விடு...
கருவில் என்னை நீ சுமந்து கொண்டு இருக்கும் போதே
அண்ணல் காந்தியைப் பற்றிப் படித்தாய்.
மாமா நேருவைப் பற்றி படித்தாய்.
அப்துல்கலாமை பற்றி படித்தாய்.
நேதாஜிவிவேகானந்தன்பகத் சிங்
பற்றியெல்லாம் படித்தாய்.
கல்பனா சாவ்லாசுனிதா வில்லியம்ஸ்
பற்றியும் படித்தாய்.
ராமாயணம்இதிகாசம்பகவத் கீதை
பற்றிக்கூட படித்தாய்.
தவறு செய்யும் மனிதனுக்கு என்ன
தண்டனை கிடைக்கும் என்பதற்க்கான
நீதிக் கதைகளையும் படித்தாய்.
பாரத பூமியைப் பற்றிப் படித்தாய்.
பக்கத்து நாடுகளைப் பற்றியும் படித்தாய்.
இந்தியக் கலாச்சாரம்குடும்பம்பாரம்பரியம்
 பற்றிகூட படித்தாய்.
யுத்தம்வரலாறுஅறிவியல்
பற்றியும் படித்தாய்.
இந்திய அரசியலையும் படித்தாய்.
எனக்காக A,B,C,D,  வையும்
சேர்த்து படித்தாய்.
நல்லவர்களைப் பற்றிப் படித்தாய்.
போராளிகளைப் பற்றிப் படித்தாய்.
ஆனால் அம்மா,
எந்தவித பாவமும் செய்யாமல் 
போராட்டத்துடனே பிறந்து
அனாதைகளாக்கப்பட்ட
என் போன்ற மழலைகளின் நிலைப்பற்றி
ஏனம்மா படிக்கவில்லை.....?
பிறந்த தேதி தெரியாவிட்டாலும்
பரவாயில்லை....
உயிர் கொடுத்த தகப்பன் பெயர்
தெரியாவிட்டாலும் பரவாயில்லை....
ஆனால்
பெற்றவளே யார் என்று
தெரியாமல் இருப்பது
எவ்வளவுப் பெரிய அவமானம் என்பதை
நீ அறிவாயா?
தன் பிறந்த நாள் தெரியாத அனாதைக்
குழந்தைகள்அடுத்தவனுக்கு என்று
பிறந்த நாள் வரும் என்று ஏங்குகின்றனர்
ஒரு வேலை சோறிடுவார்கள் என்பதற்காக....
அனாதைகளுக்கும் அம்மாஆசைபாசம்ஏக்கம்,
அன்புபண்டிகை இவையெல்லாம்
உண்டு தானே?
என்ன பாவம் செய்தார்கள் அவர்கள்
இவையெல்லாம் நிராகரிக்கப்படுவதற்கு.......?
அன்னையே!
அனாதைகளைப் பற்றி ஏன்  படிக்கவில்லை
என்று உன் மீது குற்றம் சுமத்துவதற்காக
இவை எல்லாம் சொல்லவில்லை.
எதிர் காலத்தில் என் நிலைமையும்
இப்படி ஆகி விடக் கூடாது என்பதற்காக
சொல்கிறேன்........
அன்னையே!
கேட்பதற்காக என்னை மனித்து விடு..
என் பிறப்பு அங்கீகாரம் வாய்ந்தது என்றால்
என் பிறப்பின் பின்
அப்பன்ஆத்தாள் பெயர் தெரியாத
அவமானம் நேராது என்றால்
தாயே எனை பெற்று எடு......
இல்லையேல் கருவிலேயே
கருணைக் கொலை செய்து விடு.......      




Comments

Post a Comment

Popular posts from this blog

"அக்றிணை வாழ்வே மேலென்று எண்ணி எண்ணி"

அற்புதம் என்று நடக்குமென்று ஆநிரை கூட்டம் கூட ஏங்குதம்மா! இறவாப் புகழ் தேடும் மண்ணுளி பாம்புகள் ஈவதற்கு மனித மனம் உண்டோ? உறவுகளை மறந்து போகும் மானிட சமுதாயம் ஊர் வாழ துணை நிற்குமா? எத்தனை பிறவி எடுத்திடினும் ஏன் இந்த பிறப்பென்றே எண்ண வைத்தான்! ஐந்தாண்டுக் கொருமுறை மாறிடும் ஆட்சி ஒரு முறைக் கூட சமுதாய மாற்றம் இன்றி ஓய்ந்து போனது மனித உணர்வுகள் ஒளயத்தில் மனித வாழ்வை வெறுத்து அக்றிணை வாழ்வே மேலென்று எண்ணி எண்ணி.......

வேண்டுமொரு தாய்

களத்து   மேட்டில்   நெல்   அடித்து குளத்து    மேட்டில்   துணி   துவைத்து கட்டு   சோறு   கட்டி   என்னை கல்வி   கற்க   அனுப்பினாய்   அம்மா .... காடு   மேடு   சுற்றி   வந்து காவல்   நீ   எனைக்   காத்து கழனி   சென்று   விறகு   வெட்டி கால்   வயிறு   காஞ்சி   ஊற்றினாய்   அம்மா ..... கட்டியவன்   காப்பாற்ற   வழியற்று கைவிட்டான்   உன்னை கந்து   வட்டி   கடன்   வாங்கி கலெக்டர்   எனை   ஆக்கினாய்    அம்மா ... காடு   சுற்றி   களைத்தவளை முதுகு   தேய   உழைத்தவளை ஊர்   போற்ற   வாழ   வைக்க பிள்ளை   நான்   எண்ணினேன்   அம்மா ... கடைசி   ஒரு   ஆசை   என்று கல்யாணம்   பண்ணி   வைத்தாய் கட்டிய   தாலி   மஞ்சள்   காயுமுன்னே கட்டியவள்   தள்ளி   வைக்க   சொன்னால்   உன்னை ... மனையறம்   தான்  ...