
ஆழ் கடலின் மேல் நடந்து செல்ல
இரண்டடி பாதை வேண்டும்.
துன்பத்தில் தோல் சாய்ந்து கொள்ள
கணவன் என்ற பெயரில் நண்பன் வேண்டும்.
கண்ணீரைத் துடைக்கும் கைக்குட்டையாக
நட்பின் கரங்கள் வேண்டும்.
கடந்த கால வாழ்க்கையை மீண்டும் ஒரு முறை
திருத்தி வாழ டேப் ரெகார்டரை போலவே
எனக்கும் ஒரு ரீவைன் பட்டன் வேண்டும்.
துணிகளை போலவே மனித மனங்களையும்
சலவை செய்ய ஒரு டிடர்ஜென்ட் கேக் வேண்டும்.
அன்பு என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடும் பட்டியலில்
என் பெயரும் இருக்க வேண்டும்.
அடுத்து வரும் பிறவியிலாவது கம்பனுக்கு
மகளாக பிறக்கும் வரம் வேண்டும்.
ரவி வர்மாவின் ஓவியம் கூட உயிர் பெற்று
என்னுடன் நட்புறவாட வேண்டும்.
கடவுள்கள் அனைவரும் வருடத்திற்கு ஒரு முறை
மனிதனாக மாறும் சாபம் பெற்று
மக்களின் துயர் அறிய வேண்டும்.
காதல் என்ற பெயரில் காமத்தை பரப்பும்
இளைஜர்கள் மாறும் நிலை வர வேண்டும்.
இந்த உலகத்தை புரிந்து கொள்ள
இன்னும் ஓர் இதயம் வேண்டும்.
காதலைப் பற்றி தெரிந்து கொள்ள ஓர்
மிகப்பெரிய காதல் தோல்வி வேண்டும்.
ரமணிச்சந்திரனின் நாயகன் உருபெற்று, உயிர்பெற்று
கணவனாக வரும் அற்புத வரம் வேண்டும்.
எந்தன் நிழல் கூட உறுப் பெற்று எனக்கு
தோழியாக வரும் நிலை வரவேண்டும்.
நினைத்தவுடன் மரணம், விரும்பியவுடன் ஜனனம்
கிடைக்கும் உன்னத நிலை வேண்டும்.
அழியாத கல்வியையும், குறையாத செல்வத்தையும்
கொடுக்கும் விலை நிலம் வேண்டும்.
காணி நிலம் வேண்டும் என் பாடிய பாட்டுடைத்
தலைவன் பாரதி எனக்கு குருவாக வரும் வரம் வேண்டும்.
எனது கண்ணீரை மட்டுமல்ல எனது இதயத்தில்
ஏற்பட்ட வலிகளையும் துடைத்தெரிய தூரிகை வேண்டும்.
சிலந்தியின் கூட்டில் சில நாள் சிறையிருக்க
ஜில்லென்ற வரம் ஒன்று வேண்டும்.
பறவையின் கூட்டில் பன்னிரு இரவு
படுத்துறங்க பஞ்சு மெத்தை வேண்டும்.
இரண்டடி பாதை வேண்டும்.
துன்பத்தில் தோல் சாய்ந்து கொள்ள
கணவன் என்ற பெயரில் நண்பன் வேண்டும்.
கண்ணீரைத் துடைக்கும் கைக்குட்டையாக
நட்பின் கரங்கள் வேண்டும்.
கடந்த கால வாழ்க்கையை மீண்டும் ஒரு முறை
திருத்தி வாழ டேப் ரெகார்டரை போலவே
எனக்கும் ஒரு ரீவைன் பட்டன் வேண்டும்.
துணிகளை போலவே மனித மனங்களையும்
சலவை செய்ய ஒரு டிடர்ஜென்ட் கேக் வேண்டும்.
அன்பு என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடும் பட்டியலில்
என் பெயரும் இருக்க வேண்டும்.
அடுத்து வரும் பிறவியிலாவது கம்பனுக்கு
மகளாக பிறக்கும் வரம் வேண்டும்.
ரவி வர்மாவின் ஓவியம் கூட உயிர் பெற்று
என்னுடன் நட்புறவாட வேண்டும்.
கடவுள்கள் அனைவரும் வருடத்திற்கு ஒரு முறை
மனிதனாக மாறும் சாபம் பெற்று
மக்களின் துயர் அறிய வேண்டும்.
காதல் என்ற பெயரில் காமத்தை பரப்பும்
இளைஜர்கள் மாறும் நிலை வர வேண்டும்.
இந்த உலகத்தை புரிந்து கொள்ள
இன்னும் ஓர் இதயம் வேண்டும்.
காதலைப் பற்றி தெரிந்து கொள்ள ஓர்
மிகப்பெரிய காதல் தோல்வி வேண்டும்.
ரமணிச்சந்திரனின் நாயகன் உருபெற்று, உயிர்பெற்று
கணவனாக வரும் அற்புத வரம் வேண்டும்.
எந்தன் நிழல் கூட உறுப் பெற்று எனக்கு
தோழியாக வரும் நிலை வரவேண்டும்.
நினைத்தவுடன் மரணம், விரும்பியவுடன் ஜனனம்
கிடைக்கும் உன்னத நிலை வேண்டும்.
அழியாத கல்வியையும், குறையாத செல்வத்தையும்
கொடுக்கும் விலை நிலம் வேண்டும்.
காணி நிலம் வேண்டும் என் பாடிய பாட்டுடைத்
தலைவன் பாரதி எனக்கு குருவாக வரும் வரம் வேண்டும்.
எனது கண்ணீரை மட்டுமல்ல எனது இதயத்தில்
ஏற்பட்ட வலிகளையும் துடைத்தெரிய தூரிகை வேண்டும்.
சிலந்தியின் கூட்டில் சில நாள் சிறையிருக்க
ஜில்லென்ற வரம் ஒன்று வேண்டும்.
பறவையின் கூட்டில் பன்னிரு இரவு
படுத்துறங்க பஞ்சு மெத்தை வேண்டும்.
துன்பம் மொத்தமாக தொடர்ந்து வந்தாலும்
சந்தோசம் தவணை முறையிலாவது கிடைக்கும்
நாள் வர வேண்டும்.
நெஞ்சத்தை கிழித்து இதயத்தை பிடுங்கி
அதன் வலிகளை எந்தன் பட்டு விரல்களால்
தடவி கொடுக்கும் மாபெரும் வரம் வேண்டும்.
இவையனைத்தும் உண்மையாக கிடைக்கும் என்றால்
நான் மீண்டும் ஒரு முறை புதிதாக பிறக்க வேண்டும்.
அபொழுதும் கூட
எந்தன் நட்பே!
உன் இதயக் கோவிலில் நான் குடியிருக்க வேண்டும்.
சந்தோசம் தவணை முறையிலாவது கிடைக்கும்
நாள் வர வேண்டும்.
நெஞ்சத்தை கிழித்து இதயத்தை பிடுங்கி
அதன் வலிகளை எந்தன் பட்டு விரல்களால்
தடவி கொடுக்கும் மாபெரும் வரம் வேண்டும்.
இவையனைத்தும் உண்மையாக கிடைக்கும் என்றால்
நான் மீண்டும் ஒரு முறை புதிதாக பிறக்க வேண்டும்.
அபொழுதும் கூட
எந்தன் நட்பே!
உன் இதயக் கோவிலில் நான் குடியிருக்க வேண்டும்.
Comments
Post a Comment