Skip to main content

அனுபவம்






















அம்மாவின் செல்லமகளாய்
அப்பாவின் பாசக்குழந்தையாய்
சித்தப்பாவின் குட்டிதேவதையாய்
அத்தையின் சுட்டிப்பெண்ணாய்
பாட்டியின் அன்பையும் அனுபவித்து வளர்ந்தபோது
அம்மாவின் வயிறு வீங்கியது.
அடுத்துப் பெறப்போகும் பிள்ளைக்காக.

அன்னையின் முலைப்பாலை
பகிர்ந்துகொள்ள தங்கை வந்தாள்.
என்மீது அன்புக்காட்டிய சொந்தமெல்லாம்
தங்கைமீது சாய்ந்து விட்டது
அன்னை உள்பட அவள்மீது அன்புக் காட்ட.

ஏனோ என்கோபம் எல்லாம்
முத்தத்திற்கு ஒரு சாக்லேட் கொடுக்கும்
சித்தப்பாவின் மீதும் அல்ல.
வாரியணைத்து முத்தமிடும்
பாட்டியின் மீதும் அல்ல
கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுக்கும்
அத்தையின் மீதும் அல்ல
என்னை மார்பின் மீது போட்டுத்தூங்கும்
தந்தையின் மீதும் அல்ல
என்னைக்கருவில் சுமந்து
பாசத்தை பகிர்ந்து கொடுத்த
தாய்மீது மட்டுமே..

தங்கையை கொஞ்சும் போதும்
அவளின் தளர்நடையை ரசிக்கும்போதும்
கைநீட்டி தாயை தூக்கச் சொன்ன
தங்கையை கிழேதள்ளி
என்னைமட்டும் தூக்குஎன்று
அன்னையருகில் சென்றபோது
என்னை அடித்துவிட்டு
அழும்தங்கையை தூக்கி சமாதானப்படுத்தும்போது
இன்னும் கோபம் அதிகமானது அன்னை மீது.

என்னை தமிழிலும் தங்கையை
ஆங்கிலப் பள்ளியிலும் படிக்க வைத்தது
என்னவோ தந்தைதான் என்றாலும்
என் கோபம் எல்லாம் அன்னை மீதுதான்
அளவின்றி எகிறியது.

தந்தையின் ஸ்பரிசம் குறைந்தபோதும்
பாட்டியின் கதைசொல்லும் நேரம் தவறியபோதும்
முத்தங்களை எனக்கும் தங்கைக்கும்
பகிர்ந்துகொடுத்த அன்னையின் மீதுதான்
என் வெறுப்புகள் எல்லாம்.

அங்கே செல்லாதே இங்கே போகாதே
ஆணுடன் பேசாதே இரவில் வெளியே போகாதே
அரட்டை அடிக்காதே என்று கூறும்போது
அன்னையின் மீது உள்ளகோபம் அளவின்றி எகிறியது.

என் தாயே!
நேற்று வரை தவறாக உணர்ந்து இருந்தேன்
என்மீது உனக்குள்ள பாசத்தை.
தாய் அன்பில் மாசு இல்லை
தாய்க்கு நிகருமில்லை என்று
இன்று நானும் இருகுழந்தைகளுக்கு தாயானபோதுதான்
தெரிந்து கொண்டேன் தாயே
என்மீது நீகொண்ட அன்பை....

Comments

Popular posts from this blog

"அக்றிணை வாழ்வே மேலென்று எண்ணி எண்ணி"

அற்புதம் என்று நடக்குமென்று ஆநிரை கூட்டம் கூட ஏங்குதம்மா! இறவாப் புகழ் தேடும் மண்ணுளி பாம்புகள் ஈவதற்கு மனித மனம் உண்டோ? உறவுகளை மறந்து போகும் மானிட சமுதாயம் ஊர் வாழ துணை நிற்குமா? எத்தனை பிறவி எடுத்திடினும் ஏன் இந்த பிறப்பென்றே எண்ண வைத்தான்! ஐந்தாண்டுக் கொருமுறை மாறிடும் ஆட்சி ஒரு முறைக் கூட சமுதாய மாற்றம் இன்றி ஓய்ந்து போனது மனித உணர்வுகள் ஒளயத்தில் மனித வாழ்வை வெறுத்து அக்றிணை வாழ்வே மேலென்று எண்ணி எண்ணி.......

வேண்டுமொரு தாய்

களத்து   மேட்டில்   நெல்   அடித்து குளத்து    மேட்டில்   துணி   துவைத்து கட்டு   சோறு   கட்டி   என்னை கல்வி   கற்க   அனுப்பினாய்   அம்மா .... காடு   மேடு   சுற்றி   வந்து காவல்   நீ   எனைக்   காத்து கழனி   சென்று   விறகு   வெட்டி கால்   வயிறு   காஞ்சி   ஊற்றினாய்   அம்மா ..... கட்டியவன்   காப்பாற்ற   வழியற்று கைவிட்டான்   உன்னை கந்து   வட்டி   கடன்   வாங்கி கலெக்டர்   எனை   ஆக்கினாய்    அம்மா ... காடு   சுற்றி   களைத்தவளை முதுகு   தேய   உழைத்தவளை ஊர்   போற்ற   வாழ   வைக்க பிள்ளை   நான்   எண்ணினேன்   அம்மா ... கடைசி   ஒரு   ஆசை   என்று கல்யாணம்   பண்ணி   வைத்தாய் கட்டிய   தாலி   மஞ்சள்   காயுமுன்னே கட்டியவள்   தள்ளி   வைக்க   சொன்னால்   உன்னை ... மனையறம்   தான்  ...

கருவில் இருக்கும் குழந்தையின் கடிதம்

அம்மா ! என்   பிறப்பின்   நேரம்   நெருங்கி   விட்டது . அதற்கு   முன்   என்   கடிதத்திற்கு   பதில்   அளித்து   விடு ... கருவில்   என்னை   நீ   சுமந்து   கொண்டு   இருக்கும்   போதே அண்ணல்   காந்தியைப்   பற்றிப்   படித்தாய் . மாமா   நேருவைப்   பற்றி   படித்தாய் . அப்துல்கலாமை   பற்றி   படித்தாய் . நேதாஜி ,  விவேகானந்தன் ,  பகத்   சிங் பற்றியெல்லாம்   படித்தாய் . கல்பனா   சாவ்லா ,  சுனிதா   வில்லியம்ஸ் பற்றியும்   படித்தாய் . ராமாயணம் ,  இதிகாசம் ,  பகவத்   கீதை பற்றிக்கூட   படித்தாய் . தவறு   செய்யும்   மனிதனுக்கு   என்ன தண்டனை   கிடைக்கும்   என்பதற்க்கான நீதிக்   கதைகளையும்   படித்தாய் . பாரத   பூமியைப்   பற்றிப்   படித்தாய் . பக்கத்து   நாடுகளைப்   பற்றியும்   படித்தாய் . இந்தியக்   கலாச்சாரம் ,  குடும்பம் ,  பா...