Skip to main content
                                                           ஆறாம் விறல்


எழுச்சிமிகு சமுதாயத்தின் மாண்புமிகு இளைய தேசமே!!
மன்னராட்சி மலர்ந்திருந்த காலத்தில் கூட
வேசியார் குலமங்கை கர்ப்பிற்கினியல் மாதவி 
கற்புடன் வாழ்ந்த வசந்த காலம் 
ஆறாம் விரலாய் நினைவலையில்.... 

மழலையாய் , குழந்தையாய்,சிறுமியாய்,சாமியாய், குலதெய்வமாய்
பார்க்க வேண்டிய பெண்ணியர்குல இளங்குருத்துகள்,
காமக் கயவர்களின் கடுந்தீயில் கருகி மடிகின்றன.

பதின்முன் பருவத்தில் ஈன்றவளின் முன்னே 
அரை நிர்வாணமாய் நிற்பதற்குக்கூட உடல்கூசும் 
எம்பெண்ணியர்களின் கற்பை வன்முறையாய் பறிக்கும் 
இழிசெயல்கள் இரக்கமின்றி நடைபெறுகிறது.

அரசனே ஆனாலும் மங்கையின் விருப்பம் 
முதலுரிமை ஆக்கப்பட்டு சுயம்வரம் நடந்தது.
ஆனால் இன்று நங்கையின் விருப்பம் மறுக்கப்பட்டாலும் 
அமிலத்தை அடித்து வாழும்போதே தினம் தினம் 
தூக்கிலிடப்படுகிறார்கள் எம்கலியுக கண்ணகிகள்.

முளைப்பாலின் சுவைமறக்காத பிஞ்சுகளிடம்கூட 
பாலுறவை நாடும் கபோதிகள்..
கற்சிலையையும் கற்பழிக்க துணிந்தவர்கள்.
இங்கே கருவறை குழந்தைகள் மட்டுமே  கற்புடனும் உயிருடனும்..

நரகாசுரனுக்கே நல்லவன் முத்திரை குத்தப்பட வேண்டும்.
என் இளம்மொட்டுகளை ஆனந்தமாக வளரவிடாமல் 
கசக்கி எரியும் மூர்க்கர்கள்
இவர்கள் பிறப்பிலேயே பிறப்புறுப்பு 
அறுத்தெறியப்பட வேண்டியவர்கள் 
இவர்கள் சமுதாயத்தால் அறுத்தெறியப்பட வேண்டிய 
ஆறாம் விரல்கள்....!!!

Comments

Popular posts from this blog

"அக்றிணை வாழ்வே மேலென்று எண்ணி எண்ணி"

அற்புதம் என்று நடக்குமென்று ஆநிரை கூட்டம் கூட ஏங்குதம்மா! இறவாப் புகழ் தேடும் மண்ணுளி பாம்புகள் ஈவதற்கு மனித மனம் உண்டோ? உறவுகளை மறந்து போகும் மானிட சமுதாயம் ஊர் வாழ துணை நிற்குமா? எத்தனை பிறவி எடுத்திடினும் ஏன் இந்த பிறப்பென்றே எண்ண வைத்தான்! ஐந்தாண்டுக் கொருமுறை மாறிடும் ஆட்சி ஒரு முறைக் கூட சமுதாய மாற்றம் இன்றி ஓய்ந்து போனது மனித உணர்வுகள் ஒளயத்தில் மனித வாழ்வை வெறுத்து அக்றிணை வாழ்வே மேலென்று எண்ணி எண்ணி.......

தேடிச் சோறு நிதம் தின்று/பாரதியார் கவிதை/தமிழும் நானும்/தமிழ் கவிதை/பாரதி

வேண்டுமொரு தாய்

களத்து   மேட்டில்   நெல்   அடித்து குளத்து    மேட்டில்   துணி   துவைத்து கட்டு   சோறு   கட்டி   என்னை கல்வி   கற்க   அனுப்பினாய்   அம்மா .... காடு   மேடு   சுற்றி   வந்து காவல்   நீ   எனைக்   காத்து கழனி   சென்று   விறகு   வெட்டி கால்   வயிறு   காஞ்சி   ஊற்றினாய்   அம்மா ..... கட்டியவன்   காப்பாற்ற   வழியற்று கைவிட்டான்   உன்னை கந்து   வட்டி   கடன்   வாங்கி கலெக்டர்   எனை   ஆக்கினாய்    அம்மா ... காடு   சுற்றி   களைத்தவளை முதுகு   தேய   உழைத்தவளை ஊர்   போற்ற   வாழ   வைக்க பிள்ளை   நான்   எண்ணினேன்   அம்மா ... கடைசி   ஒரு   ஆசை   என்று கல்யாணம்   பண்ணி   வைத்தாய் கட்டிய   தாலி   மஞ்சள்   காயுமுன்னே கட்டியவள்   தள்ளி   வைக்க   சொன்னால்   உன்னை ... மனையறம்   தான்  ...